Breaking News : திருப்பத்தூர் , ராணிப்பேட்டை தனித்தனி மாவட்டமாக அறிவித்தார் -முதலமைச்சர் பழனிச்சாமி !

Breaking News : திருப்பத்தூர் , ராணிப்பேட்டை தனித்தனி மாவட்டமாக அறிவித்தார் -முதலமைச்சர் பழனிச்சாமி !

73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை ஜார்ஜ் கோட்டைக்கு வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போலீசார் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டு.  முதல்வராக பதவியேற்று எடப்பாடி பழனிசாமி 3-வது முறையாக ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் ,வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தனித்தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.இந்த 2 புதிய மாவட்டங்களையும் சேர்ந்து தமிழகத்தில் மொத்தமாக 37 மாவட்டங்களாக உயர்ந்து உள்ளது.

மேலும் கே .வி குப்பத்தை தலைமை இடமாக கொண்டு வட்டம் என அறிவித்தார்.சமீபத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி கள்ளக்குறிச்சி , செங்கல்பட்டு , தென்காசி ஆகியவை  புதிய மாவட்டங்களாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube