BREAKING:அதிமுகவினர் ரகளை.! தேர்தல் ஒத்திவைப்பு.!

BREAKING:அதிமுகவினர் ரகளை.! தேர்தல் ஒத்திவைப்பு.!

  • வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டு இருந்த போது அதிமுகவினர்  கண்ணாடி ,கதவுகளை உடைத்து  ரகளை ஈடுபட்டனர்.
  • இதனால் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் என 5 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகத்தில் இன்று  ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டு இருந்த போது அதிமுகவினர் அலுவலகத்தில் இருந்த கண்ணாடி ,கதவு உள்ளிட்டவைகளை உடைத்து  ரகளை ஈடுபட்டனர். இதனால் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

author avatar
murugan
Join our channel google news Youtube