மக்கள் மறக்க மாட்டார்கள் அடிமைகளே! சென்னை மழைவெள்ளம் குறித்து உதயநிதி ட்வீட்!

மக்கள் மறக்க மாட்டார்கள் அடிமைகளே! சென்னை மழைவெள்ளம் குறித்து உதயநிதி ட்வீட்!

2015 வெள்ளத்திலிருந்து அடிமைகள் படம் கற்கவில்லை. இன்னும் வீரியமாக ஊழல் செய்கின்றனர். 

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘வீடு, சாலை எங்கும் வெள்ளம். ஒரு நாள் மழைக்கே சென்னை மிதக்கிறது. உள்ளாட்சி துறையை ஊழலாட்சி  துறை ஆக்கிவிட்ட வேலுமணியும், அவரது டெண்டர் பார்ட்னர் எடப்பாடியும் அவதூறு போஸ்டர் ஒட்டிய நேரத்தில் கொஞ்சமாவது வடிகால்களை தூர்வாரியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

2015 வெள்ளத்திலிருந்து அடிமைகள் படம் கற்கவில்லை. இன்னும் வீரியமாக ஊழல் செய்கின்றனர். மக்கள் மறக்க மாட்டார்கள் அடிமைகளே.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube