#BREAKING: தொடங்கியது மறைமுகத் தேர்தல்

  • மாவட்ட ஊராட்சி  தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
  • 3 மணிக்கு மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது.
தமிழகத்தில்  உள்ள 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர், மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று வாக்களித்து இவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
தற்போது மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கும்,பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது.பதவிகளுக்கு போட்டியில்லாத இடங்களில் தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.போட்டி இருக்கும் இடங்களில் மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்படும்.