#BREAKING : அதிகரிக்கும் பாதிப்பு ! 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில், நேற்று  ஒரே நாளில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.