#BREAKING : கனமழை எச்சரிக்கை- நாளை திருவாருரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்தது.குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக மழை அநேக இடங்களில் கனமழை பெய்து வருகிறது.மேலும்  அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம் ,தூத்துக்குடி ,நெல்லை வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தற்போது தொடர் கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக  ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.