#Breaking : முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்

  • சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பி.எச்.பாண்டியன் உடலநலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
  • முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார் .

பி. எச். பாண்டியன்  திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 ஆண்டுகளில் அதிமுக சார்பாக தமிழ்நாட்டுச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 1980 முதல் 1985 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்றத் துணைத்தலைவராகப் பதவி வகித்தார். பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தலைவராகப் பதவி வகித்தார். 1989-ஆம் அதிமுகவின் ஜானகி ராமச்சந்திரன் பிரிவிலிருந்து தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவராவார். 1999-ஆம் ஆண்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின்  அமைப்புச் செயலாளராகவும் இருந்தார்.

இந்நிலையில்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பி.எச்.பாண்டியன் உடலநலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.