#Breaking: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1397 ஆக உயர்வு.! பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.!

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகின்றனர். இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,18,699 ஆக அதிகரித்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,784 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,73, 197பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் தற்போது நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251 லிருந்து 1397 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 லிருந்து 35 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து 124 பேர் குணடமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கப்பட்ட மாநிலம் கேரளா 234, மகாராஷ்டிரா 216, தமிழ்நாடு 124 பேரும் அதிகப்படியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்