#BREAKING: செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது பற்றி ஆராய குழு அமைப்பு.!

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி தேர்வுகள்  ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.  இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது..

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழு யுஜிசி அறிவுறுத்தல் படி தேர்வுகளை நடத்தமுடியுமா..? என்பது குறித்து பரிந்துரைக்க உத்தரவு

author avatar
murugan