BREAKING: மத தலைவர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை.!

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பலருக்கு கொரோனா தோற்று உறுதியாகி உள்ளது.இதையெடுத்து  நாடு முழுவதும் பல்வேறு மதரீதியாக கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு அனைத்து மதத் தலைவர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா குறித்து மதரீதியாக கருத்துகள் முழுவதுமாக தவிர்க்கவேண்டும் என அனைத்து மதத் தலைவர்களுடன் அறிவுருத்துவதன் மூலமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்ற அடிப்படையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இருந்து டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட 264 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று வரை கண்டறியப்பட்டுள்ளது.  

author avatar
murugan