#BREAKING: தமிழகம் முழுவதும் இலவசம் .! முதலமைச்சர் அறிவிப்பு .!

தமிழகத்தில் ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி  அறிவித்தார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடம் பேசினார்.

அப்போது, தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 4 முறை ஆலோசனை நடத்தி இருக்கிறோம் என தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நோய் பரவலை தடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து
தமிழக மக்களுக்கு ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

தமிழகத்தில் ஏற்கனவே ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி  அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk