BREAKING: தமிழகத்தில் கடந்த 7 நாள்களில் 1,25,793 பேர் கைது.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில்  தற்போது  இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1637 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 38 பேர் இறந்துள்ளனர்.

கொரோனாவை தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதையெடுத்து அனைத்து மாநிலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும் பல மாநிலங்களில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி  வழக்கம் போல வெளியில் சுற்றி வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில் கடந்த 7 நாள்களில் 1,25,793  பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுத்ததாகவும்,  1,08,922 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

author avatar
murugan