உங்களை பிரமிக்க வைக்கும் வகையில் உடல் எடையை குறைக்க உதவும் பிரம்மி!

உடல் எடையை குறைக்க உதவும் பிரம்மி தூள்.

இன்றைய நாகரீகம் வளர்ச்சி கண்டுள்ள காலகட்டத்தில், உணவுகளில் கூட நாகரீகம் என்கின்ற பெயரில் கலாச்சார உணவுகள் மறக்கடிக்கப்பட்டு, மேலை நாட்டு உணவுகளை தான் மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். இதில் உள்ள அதிகபடியான கலோரிகள் நமது உடலின் அபூர்வ வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.

எனவே, இன்று மிக சிறிய வயதிலேயே, பெரிய மனிதர்களுடைய தோற்றம் வந்துவிடுகிறது. உடல் எடை அதிகரித்த பின், எடையை எவ்வாறு குறைப்பது என, அதற்கான வழிகளை தேடி திரிகிறோம். உடல் எடையை நாம் செயற்கையான முறையில் குறைப்பதை விட, இயற்கையான வழிமுறைகளை கைக்கொண்டு, அதன் மூலம் உடல் எடையை குறைப்பது தான் நல்லது.

தற்போது இந்த பதிவில், பிரம்மி நமது உடல் எடையை குறைப்பதில் எப்படி பங்கு வகிக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

பிரம்மி நமது உடல் எடையை குறைப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது நமது உடலில் உள்ள நச்சு தன்மைகளை போக்குவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. சில நேரங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள நச்சுக்களால், கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படும் போது, அதன் பாதிப்பை சரி செய்வதில் பிரம்மி முக்கியமான பங்கினை வகிக்கிறது.

பிரம்மி உடல் எடையை குறைப்பதிலும் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் 15 நாட்களில் நமது உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் கொண்டது. தற்போது உடல் எடையை குறைக்க பிரம்மி தூளை பயன்படுத்தி, மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பிரம்மி தூள் – 1 டீஸ்பூன்
  • வெந்நீர் – 1 கப்
  • நெய் –  1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பிரம்மி தூளை எடுத்து, வெதுவெதுப்பான நீரில் கலக்க வேண்டும். பின் அதனுடன் 1 தேக்கரண்டி நெய் கலக்க வேண்டும்.

இவை மூன்றையும் கலந்து, நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு இந்த மூலிகை சீயை தாயார் செய்து 15 நாட்களுக்கு குடித்து வந்தால், நமது உடலில் உள்ள தேவையற்ற களோரிகளை கரைத்து, நமது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.