இரண்டுமே மகிழ்ச்சி அளிக்கிறது -ராமதாஸ் 

இரண்டுமே மகிழ்ச்சி அளிக்கிறது -ராமதாஸ் 

8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நிம்மதி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.மேலும் தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல என்று மத்திய அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நிம்மதி அளிக்கிறது.தேசிய கல்விக் கொள்கையில் இந்தி பாடம் கட்டாயம் என்ற பரிந்துரை திரும்பப் பெறப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி என்று பாமக நிறுவனர் ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube