ஒரு பெண்ணாக பிறந்தது சாபக்கேடா! பிரபல நடிகை ஆவேசம்!

இஷா குப்தா பிரபலமான இந்திய திரைப்பட நடிகையாவார். இவர், பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மிஸ் இந்தியா என்ற சர்வதேச பட்டத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இஷா குப்தா தனது தோழிகளுடன் இணைந்து, டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், இரவு விருந்து உண்ண சென்றுள்ளனர். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அந்த ஹோட்டல் உரிமையாளர் அவரை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்.

இதனையடுத்து, இவர் மூன்று முறை எச்சரித்துள்ளார். இவர் எச்சரித்தும் மீண்டும் அவரை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். அதன் பின் இவரை சுற்றி இவரது இரண்டு பாதுகாவலர்களும் நின்றுள்ளார். கண்களால் பலாத்காரம் செய்த அந்த ஹோட்டல் உரிமையாளரின் பெயர் ரோகித் விக். இந்நிலையில் , இஷா குப்தா தனது ட்வீட்டர் பக்கத்தில், ரோஹித்தின் புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு பெண்ணாக பிறந்தது சாபக்கேடா என கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/eshagupta2811/status/1147396866570620928

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.