அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சினிமா பிரபலங்களின் உடல்கள்! இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்!

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சினிமா பிரபலங்களின் உடல்கள்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், கடந்த 2 மாத காலமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், சினிமா தொழிலாளர்கள் பலரும் வறுமைக்குள் தள்ளப்பட்டனர். 

இந்நிலையில், சென்னையில் கொடுங்கையூரில், ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், போலீசார் அங்கு சென்று பார்த்ததில் 2 அழுகிய பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை விசாரித்ததில், சின்னத்திரை நடிகர்கள் ஸ்ரீதர், ஜெய கல்யாணி என்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து. போலீசார், படப்பிடிப்பு நடக்காததால், வறுமையில் தற்கொலை செய்து கொண்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.