இரத்த தான மையங்கள் அரசின் நேரடி பார்வையில் இருக்க வேண்டும்…திருமாவளவன் வேண்டுகோள்..!!

தமிழகத்தின் இரத்த தான மையங்கள் அரசின் நேரடி பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV வைரஸ் இருந்த இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்  , கர்ப்பிணிப் பெண்ணுக்கு HIV இரத்தம் செலுத்தப்பட்டது உள்நோக்கத்துடன் செலுத்தப்பட்டது இல்லை என்றாலும் நிறுவகத்தின் கவனக்குறைவால் இன்று ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கின்றது. இனியாவது இரத்த தான மையங்கள் தமிழக அரசின் நேரடி பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment