பொதுவாக பெண்களுக்கு பாலியல் ரீதியான பிரச்சினைகள் உலகம் முழுவதும் உள்ளது.இந்த நிலை இயல்பு வாழ்கை மட்டும் அல்லாமல் சினிமா அளவிலும் உள்ளது .இதே நிலை தான் ஒரு நடிகைக்கும் நடந்துள்ளது.அவர் நார்வேவை சேர்ந்த நடிகையும் மாடலுமான நட்டாசியா மால்தி .இவர் கடந்த 2008ஆம் ஆண்டு பாப்தா விருது வாங்கினார்.இவர் எலெக்ட்ரா மற்றும் லேக் ப்ளாசிட் படங்களில் நடித்துள்ளார் .
பின்னர் அவர் ஹோட்டல் அறையில் தங்கி இருந்தாராம் .அங்கு இருந்த புகழ் பெற்ற தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் அவரை கட்டாய படுத்தி பாலியல் துன்புருத்தால் செய்தாராம் .மேலும் வலு கட்டாயமாக அவரை உறவு கொண்டாராம் .அவரது விருப்பம் இல்லாமல் நடந்ததாம் .இதை அவர் நியூயார்க்கில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.மீண்டும் அவர் தயாரிப்பின் மூலம் நடந்த மற்றொரு படத்திலும் நடிக்கும் போதும் உறவு கொள்ள கூறினார் என்றும் சொன்னார்.இதற்கு மறுத்ததால் அவரை திட்டியதாக கூறினார்.
ஆனால் அந்த தயாரிப்பாளர் இந்த விஷயத்தை மறுத்துவிட்டார். ஆனால் மால்தி காவல்துறையில் அறிக்கை மூலம் தான் வழக்கறினர் அளிப்பதாகவும் கூறினார்.இந்த தயாரிப்பாளர் பல்வேறு பாலியல் சர்ச்சைகளில் சிக்கியவர் ஆவார்.இதனால் ஆஸ்கார் விருதே கிடைக்காமல் போனது குறிப்பிட தக்கது .