- இந்த காலகட்டங்களில் தூக்கம் என்பது குறைவு. காரணம் அதிகமான இரவு வேலைகள் ,இரவில் தூக்கமின்மை இதனால் உடலுக்கு தேவையான வேதிப்பொருள் சுரக்காமல் போகிறது.அதாவது இரவில் மட்டுமே சுரக்கும் ‘மெலடோனின்’ என்ற வேதிப்பொருள் இரவில் கண் விழித்தால் சுரக்காது என்கிறது மருத்துவ உலகம். மூளையில் இருக்கும் பினியால் சுரப்பி சுரக்கும் இந்த மெலடோனின், சுரக்காமல் போனால் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கு தீங்கை ஏற்படுத்தும் . மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைத்து விடும்.