திருச்செந்தூரில் பொன்.ராதாகிருஷ்ணன்-கருணாஸ் திடீர் சந்திப்பு..!

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிதித்துறை இணை மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று வந்தார். 
திருச்செந்தூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணாஸ் எம்.எல்.ஏ. காரில் கோவிலுக்கு வந்தார். அப்போது நேருக்கு நேர் இருவரும் சந்தித்து கொண்டனர். இதனையடுத்து பொன்.ராதாகிருஷ்ணனும், கருணாஸ் எம்.எல்.ஏ.வும் காரிலிருந்து இறங்கி தனியாக சென்று சுமார் 15 நிமிடங்கள் பேசினர். அதன் பின்னர் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment