கர்நாடகா தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு சொன்ன நடிகர்

கர்நாடகா தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு சொன்ன நடிகர்

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் நடிகர் கிஷோர்.
கர்நாடகாவில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.
கர்நாடாகவின் ஷிவனஹல்லி அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் தன் குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்.
இவர் காவிரி பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று கேட்டபோது, கர்நாடகாவிலிருந்து வரும் மலைப்பகுதியிலிருந்து தான் காவிரி உட்பட பல இடங்களுக்கு தண்ணீர் செல்லும். ஆனால் கடந்த சில வருடங்களாக கர்நாடகாவிலிருக்கும் பகுதிகளில் கூட தண்ணீர் சரியாக கிடைப்பதில்லை. அதனால் தான் அவர்களும் தர மறுக்கிறார்கள்.
இதற்கு காரணம் காட்டுப்பகுதிகளை தொடர்ந்து அழித்து நகரங்களை வளர்த்து வருகிறோம். இனியாவது காடுகளை அழிக்காமல் காத்து வளர்த்தாலே தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றார்.
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *