மத்திய பிஜேபி அரசின் முடிவுகள் மற்றும் திட்டங்கள் பெரும்பாலும் பொதுமக்களுக்கு எதிரானவையாகவே இருக்கிறது:கேரளா முதல்வர் பினராயி விஜயன்

திருவனத்தபுரம்:எரிவாயு மானியத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு பொது மக்களின்  தினசரி செலவுகளை அதிகரிக்கும் என்றும், சாமானிய மனிதனுக்கு சிரமங்களை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,  இந்த முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தயுள்ளார்.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும்கட்சியாக உள்ளது.
மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலையை மாதந்தோறும் 4 ரூபாய் உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதுடன், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மானியம் முழுவதையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு ,  பொதுமக்களிடையே கடும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment