கிரிக்கெட்டில் இந்தியாவின் மித்தாலிராஜ் உலக சாதனை!

பிரிஸ்டோல்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் உலக சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் என்ற வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸ் ஒருநாள் போட்டிகளில் அதிகளவாக 5992 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்திருந்தார். 191 போட்டிகளில் விளையாடி அவர் இந்த சாதனையை படைத்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவின் மித்தாலி ராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சார்லட்டின் சாதனை முறியடித்துள்ளார். அதோடு ஒரு நாள் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையையும் அவர் படைத்து இந்திய கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
author avatar
Castro Murugan

Leave a Comment