குற்றாலத்தில் சீசன் களை கட்டியது :அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

குற்றாலத்தில் சீசன் மீண்டும் களை கட்டியுள்ளது. அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.குற்றாலத்தில் கடந்த பத்து நாட்களாக மழையில்லாமல் சீசன் மோசமான நிலையை எட்டியது.
அருவிகளில் நீர்வரத்தும் குறைந்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் குற்றாலம் மலைப்பகுதியில்மழைப்பெய்யத் துவங்கியுள்ளது. இதனால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மெயின்அருவியில் பெண்கள் பகுதியிலும் அதிக தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும்தண்ணீர் விழுகிறது. நேற்று முழுவதும் வெயில் தெரியவில்லை. குளுகுளு சீசன் மீண்டும் களைகட்டுகிறது.குற்றாலம் மட்டுமின்றி தென்காசி, மேலகரம், செங்கோட்டை பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழைபெய்தவண்ணம் உள்ளது. மலைப்பகுதியில் மழை பெய்வதால் குற்றாலத்தின் ரம்மியமான
சீசன் இன்னும் சில தினங்களுக்கு தொடர வாய்ப்புள்ளது
author avatar
Castro Murugan

Leave a Comment