காமக்கொடூரர்களின் கண்மூடித்தனமான வெறிச்செயல்….!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்…!!

  • பொள்ளாச்சியில் நடந்தேறிய காமக்கொடூரர்களின் வெறித்தனமான செயல்.
  • பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க கோரி, மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மயக்கி, வர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது ஒரு கும்பல்.

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும், இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 8 பேர், இதில் நான்கு குற்றவாளிகள் முக்கிய குற்றவாளிகள்.

இந்த நான்கு குற்றவாளிகள் மீதும், குண்டர் சாண்ட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், காமக்கொடூரர்களின் இந்த கொடுமையான செயலை கண்டித்து, திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவாகரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் இந்திய மாணவர் சங்கத்தினர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment