ஆட்சியை தக்கவைத்துவிட்டார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா! தொடரும் பாஜக வெற்றி!

  • கர்நாடக இடைத்தேதலில் தற்போது வரை 7 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. 1 தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது. 
  • 6 தொகுதிகள் வென்றால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என ஆளும் பாஜக இருந்து வந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் நடைபெற்ற 15 சட்டமன்ற தொகுதியில் ஆளும் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

ஆளும் பாஜக அரசு ஏற்கனவே 106 உறுப்பினர்களை கொண்டு பெரும்பான்மை நிரூபித்திருந்த நிலையில், தற்போது இந்த 15 தொகுதிகளில் 6 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை ஆனது தற்போது பல தொகுதிகளில் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதன்படி பாஜக அரசு தற்போது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் எடியூரப்பா தலைமையிலான ஆளும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மேலும் ஐந்து தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.