மோடியை-யும் யோகியை-யும் விமர்சித்ததுக்காக ஊனமுற்றவரை தாக்கிய பாஜக தலைவர்..!!

முன்னாள் முதலமைச்சரை ஆதரித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த  ஊனமுற்ற வாலிபரை  பாரதீய ஜனதா கட்சிதலைவர் தாக்கிய சம்பவம் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பால் மாவட்டத்தின் சந்துசி தெஹில் பகுதியில் இருக்கும்  குர்ஜா கேட் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ் குஜார் ஆவார்.இவர் ஒரு ஊனமுற்ற  மாற்றுதிறனாளி .
அந்த மாற்றுத்திறனாளி மோடியையும்,யோகியையும் விமர்சித்ததாக கூறப்படுகின்றது.இதனால் ஆத்திரமடைந்த பாரதீய ஜனதா கட்சி நிர்வாகி முகமது மியான் என்பவர் நீ அகிலேஷ் யாதவுக்கு வாக்களித்தவன் என கூறி தனது வாகனத்திலிருந்த குச்சியை எடுத்து அந்த மாற்றுத்திறனாளி இளைஞரைத் அடித்துள்ளார்.
இவர் அடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.இதனால் இவரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அஸ்மோலி காவல் நிலையம் மியான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.விடுதலைக்கு பின் மியான் தெரிவிக்கையில் , நான் எனது கட்டுப்பாடை இழந்து அவரை தாக்கி விட்டேன் இதற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment