ஓட்டுக்காக கீழ்த்தனமான அரசியல் செய்யும் பாஜக….யெச்சுரி குற்றசாட்டு…!!

வாக்குக்காக பாரதீய ஜனதா கட்சி கீழ்த்தனமான அரசியலை செய்கின்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சுரி குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று நெல்லையில் ரஷ்யா புரட்சியாளர் லெனின் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு சார்பில் நிறுவப்பட்டு இருந்தது.இந்த சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராமன் யெச்சுரி திறந்து வைத்த்து பேசினார்.

இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களிடம் , ஓட்டுக்காக பாஜக தரக்குறைவான அரசியலை செய்து வருகின்றது என்று குற்றம் சாட்டினார்.மேலும் அவர் பேசுகையில் பாராளுமன்றத்தில் இடதுசாரி M.P_க்களின் எண்ணிக்கையை அதிகரிப்போம் என்று தெரிவித்தார் .மேலும் அவர்கள் தெரிவிக்கையில் மக்கள் முதலில் M.P_க்களை தேர்வு செய்து அதற்க்கு அடுத்ததாகத்தான் பிரதாமரை அறிவிப்போம் என்று தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment