பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாதது அல்ல – ப.சிதம்பரம்

பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாதது அல்ல – ப.சிதம்பரம்

  • ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி  வெற்றிபெற்றுள்ளது. 
  • பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாதது அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளே அதிக இடங்களை பிடித்து பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாதது அல்ல.எதிர்க்கட்சிகள் ஓரணியாக இணைந்தால் தோற்கடிக்க முடியும்.

தேசத்திற்கு தற்போது வந்திருப்பது ஏதோ சாதாரண பிரச்னை அல்ல. குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. இந்துக்களுக்கு அனுமதி, ஆனால் இலங்கை இந்துக்களுக்கு அனுமதி இல்ல.இதற்கு தர்க்கரீதியாக நியாயம் கற்பிக்க முடியாது.பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாதது அல்ல.எதிர்க்கட்சிகள் ஓரணியாக இணைந்தால் தோற்கடிக்க முடியும்.இந்தியாவை ஜெர்மனியாக்க ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராடும் மாணவர்களைக்  கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube