ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி – காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு.!

மத்திய பிரதேசத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக பாஜக குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். பின்னர் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு கொண்டு செல்ல, பாஜக 3 விமானங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மாஃபியாக்களுக்கு எதிராக கமல்நாத் நடவடிக்கை எடுத்ததால் தான், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

இதனிடையே காங்கிரசின் முக்கிய தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, ராஜினாமா கடிதத்தை தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20க்கும் மேற்பட்டோர்  ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனையில் மேற்கொண்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்