பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்வு

பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது.மூளைக் காய்ச்சல் அறிகுறியுடன்  மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாக குறைந்தது காணப்படும்.
இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஆனால் தற்போது  மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.முஸாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் 104 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.