அதிமுகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நிறைவு

அதிமுகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நிறைவு

அதிமுகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

 இன்று  சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில்  ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை மேற்கொண்டனர்.ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .  இந்நிலயியில் அதிமுகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

Join our channel google news Youtube