பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள வனிதா, தனது ஆட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளார். தர்சன் வெளியே சென்றதற்கு காரணம் ஷெரீன் தான் என்றும், நீ கற்பனை உலகத்தில் இருந்தாய் என்று சொல்ல முடியாது. நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா? என பல கேள்விகளை கேட்கிறார்.
இதனை கேட்டு ஷெரீன் கதறி அழுகிறார். நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது என அழுகிறார். அவருக்கு கஸ்தூரி மற்றும் சாக்ஷி இருவரும் ஆறுதல் கூறுகின்றனர்.
#Day101 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. https://t.co/Ii6u5ojpF5#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 2, 2019