biggboss 3: போலிஸாருக்கு வாக்குறுதி அளித்த வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது  நடைபெற்று வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா, தற்போது ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில், வனிதாவின் கணவர் ஆனந்தராஜ், தனது மகளை வனிதா கடத்திவிட்டதாக அவர் மீது தெலுங்கானா போலீசாரிடம் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வனிதாவை, நசரத்பேட்டை போலிஸாரின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, வனிதா போலிஸாருக்கு ஒரு வாக்குறுதி  அளித்துள்ளார். அவர் கூறியதாவது, மாலை 5 மணிக்கு பிறகு தனது பாதுகாப்பில் உள்ள ஜெனிதாவை அழைத்து வர சம்மதம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும், போலீசார் மகளிடம், அப்பாவிடம் செல்ல விருப்பமா அல்லது அம்மாவிடம் செல்ல விருப்பமா என கேட்டு முடிவு செய்யவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.