biggboss 3: அப்பா என்னைய அன்போடு அணைப்பாங்கனு நெனச்சேன்! ஆனா அப்பா கேட்ட அந்த ஒரு வார்த்தை எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி!

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா. இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். லொஸ்லியா கலந்து கொண்ட நாள் முதல் அவருக்கென்று தனியாக பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும், அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் சில குழுக்களுக்களும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், லொஸ்லியா அவரது தந்தையை பிரிந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட freeze டாஸ்க்கிற்காக அவரது தந்தை உள்ளே வந்தார். தந்தையை பார்த்த லொஸ்லியா சத்தம் போட்டு அழுதார். ஆனால், கவின் மற்றும் லொஸ்லியாவிற்கு இடையே ஏற்பட்ட காதலால், லொஸ்லியவை அவரது தந்தை கோபப்பட்டு திட்டும் அளவிற்கு ஆக்கிவிட்டது.

இந்நிலையில், இதுகுறித்து பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது, நான் இந்த வீட்டுகுள்ள வரும் போது நான் யோசிச்ச ஒரே ஒரு விஷயம், யாருக்குடையும் அதிகமாக பழக கூடாது. அழக்கூடாது என நினைத்தேன். நானும் அப்பாவும் சந்திக்கும் போது நான் நொறுங்கிருவேன்னு எனக்கு தெரியும். ஆனால் அன்போடு என்னை கட்டி அணைக்க வேண்டிய எனது தந்தை, அவங்களும் கேட்ட ஒரு வார்த்தை நீ என்ன பண்ணிட்டு இருக்க என்று. இந்த வார்த்தை என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.