biggboss 3: நாங்க விட்டுகுடுத்து போனதெல்லாம் மதுமிதா கண்ணுக்கு தெரியலையா? கதறி அழும் கவின்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலு, இந்த பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக, வனிதா விஜயகுமார் வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், மதுமிதா, கவினை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த கவின் அழுகிறார். இதனையடுத்து சாண்டி, பெண்களை அடிமைப்படுத்துறேன்னு சொல்றாங்களே, மதுமிதாக்கு அடிப்பட்ட போதெல்லாம், நான் விட்டுகுடுத்துட்டு இறங்கி போனோம். அதெல்லாம் தெரியலையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.