பிக் பாஸ் மதுமிதா திடீர் செய்தியாளர்கள் சந்திப்பு! பரபரப்பு பேட்டி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேறினார் போட்டியாளர் மதுமிதா. இதற்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. பிக் பாஸ் வீட்டினுள் தற்கொலை முயற்சி செய்ததால் அவர் வெளியேற்றபட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று, விஜய் டிவி சார்பில், மதுமிதா சம்பள பணத்தை தராவிட்டால் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக இன்று  செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா, ‘ எனக்கு கொடுக்க வேண்டிய வேண்டிய பணத்தினை கொடுத்து விடுவதாக விஜய் டிவி நிர்வாகம் ஏற்கனவே கூறிவிட்டது. இந்நிலையில் திடீரென எதற்காக என்மீது புகார் அளிக்கப்பட்டது என தெரியவில்லை.

இது குறித்து, விஜய் டிவியிடம் கேட்க, தொடர்பு கொண்டேன். ஆனால், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுவரை விஜய் டிவி நிபந்தனைக்கு உட்பட்டுதான் அனைத்தையும் செய்து வருகிறேன். அதற்க்குள் எதற்காக என்மீது புகார் அளித்தனர் என தெரியவில்லை.’ என தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.