- 12வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளது
- அனைத்து அணிகளும் தங்களது பயிற்சி நேரத்தை ஆரம்பித்துவிட்டன.
12வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் இந்தியாவில் துவங்க உள்ளது. முதல் 17 போட்டிகளுக்காண அட்டவணையை மட்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்ற வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பஞ்சாப் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டிவிட் செய்துள்ளார்.
கடந்த வருடம் முழுவதும் தமிழ்ப் புலவரை போல ட்வீட் செய்து வந்த அவர் தற்போது ராணுவ வீரன் போல் தமிழ் தேசியத்திற்கு மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன் என டுவிட் செய்துள்ளார்.
பேரன்பிற்கும்,பெருமதிப்பிற்குரிய என்னருமை @ChennaiIPL ரசிகர்களே மீண்டும் @ipl ல் பங்கேற்க தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன்.ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான் அதே
உணர்வு தான் என்னுள் இப்போது #WhistlePodu @CSKFansOfficial pic.twitter.com/zkyKiP0ToN— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 16, 2019