சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா- ஸ்ரீகாந்த்.!

சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா- ஸ்ரீகாந்த்.!

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவை புகழ்ந்துக்குறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்துள்ளார், இவருடைய பேட்டிங் திறமையை பற்றி நாம் சொல்லியே தெரியவேண்டாம், மேலும் ரோஹித் தனது 29 ஒருநாள் சதங்களில், 11 முறை 140-க்கும் அதிகமான ரன்களுடன் சதம் அடித்துள்ளார் பல சாதனைகளை படைத்து இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக திகழ்கிறார்.

இந்நிலையில் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ரோஹித் சர்மாவை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார், அதில் அவர் கூறியது, ரோஹித் சர்மா ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர் சிறிது நேரம் எடுத்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார், மேலும் மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் ரோகித் சர்மா 3 அல்லது 5 ஆம் இடம் கொடுக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா நான் மிகச்சிறந்த ஒருநாள் தொடக்க வீரர்களில் மிகவும் சிறந்த வீரர் என்று கூறுவேன்.மேலும் ரோஹித் சர்மாவின் சிறந்த சாதனை என்றால் அவருடைய மிகப்பெரிய சதங்கள் மற்றும் இரட்டை சதங்கள். இது ஆச்சரியமான ஒன்று என்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube