நம்பி இருந்தேன்! மேனேஜரே கெடுத்து விட்டார்!

  • மலையாளத்தில் மொழி பிரச்னையை சமாளிக்க மேனேஜர் வைத்துக் கொண்டேன்.
  • சுயநலத்துக்காக என் கேரியரை கெடுத்துவிட்டார்.

நடிகை மீரா வாசுதேவன்,  தமிழ் சினிமாவில் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் மலையாளத்தில் ‘தன்மத்ரா’ படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் நடித்த அணைத்து படங்களுமே தோல்வியில் தான் முடிந்தன. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மலையாளத்தில் மொழி பிரச்னையை சமாளிக்க மேனேஜர் வைத்துக் கொண்டேன். அந்த மேனேஜரை நம்பி கதை கேட்காமலே நடித்தேன்.  ஆனால்,அவர் தன் சுயநலத்துக்காக என் கேரியரை கெடுத்துவிட்டார்.’ என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.