பீர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.! 15 ஆயிரம் நஷ்ட ஈடாக பெற்ற வாடிக்கையாளர்.!

  • திருநெல்வேலியில் அமிர்தம் தனியார் மதுபான பாரில் குடித்த பீருக்கு கூடுதலாக 240 ரூபாய் வசூலித்ததால், வெங்கடேஷ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
  • விசாரித்த நீதிமன்றம் மதுபான விற்ற பாருக்கு ரூ.15,000 அபராதம் விடுத்தத, வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக ரூ.10,000 பணமும், வழக்கு செலவாக ரூ.5,000 தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அமிர்தம் என்ற பெயரில் தனியார் மதுபான கடை ( பார்) ஒன்று இயங்கி வருகிறது. அங்கு வழக்கமாக வரும் வெங்கடேஷ் என்பவர் பீர் வாங்கி குடித்துள்ளார். அப்போது அவர் குடித்த பீருக்கு கூடுதலாக 240 ரூபாய் வசூலித்த கடை நிறுவுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பீரின் விலையை விட கூடுதலாக வசூலித்த அமிர்தம் தனியார் மதுபான பார் மீது வெங்கடேஷ், நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிக விலைக்கு பீர் விற்பனை செய்த தனியார் மதுபான விற்ற பாருக்கு அமிர்தம் பாருக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.10,000, வழக்கு செலவாக ரூ.5,000 தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல்துறை அதிகாரிகள் அந்த தனியார் மதுபான விடுதியை சோதனையிட்டு நடவடிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்