அழகிய தீர்வு! தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல, திருத்தப்பட்டது வரைவு : ஏ.ஆர்.ரகுமான் பெருமிதம்

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம், புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது. இந்த கொள்கையின் அடிப்படையில், இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், 3-வது மொழியாக இந்தியை பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அழகிய தீர்வு, தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல. திருத்தப்பட்டது வரைவு.’ என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.