#Breaking : தமிழகத்தில் இன்றும் கனமழை நீடிக்கும்.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

#Breaking : தமிழகத்தில் இன்றும் கனமழை நீடிக்கும்.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால், தமிழகத்துக்கு கனமழை இன்றும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அங்கங்கே வெள்ள காடாக காட்சியகிறது தமிழகம்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுகளை ஒட்டியுள்ள பகுதியில் நிலைகொண்டுள்ள மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube