ஜன..,8,9 மீண்டும் வங்கிகள் வேலைநிறுத்தம்..!!தொடர்ந்து 2 நாட்கள் வேலை நிறுத்தம்..! கலக்கத்தில் மக்கள்..!!

ஐடிபிஐ  வங்கி மற்றும் அனைத்து இந்திய ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பானது மும்பை பங்குச்சந்தைக்கு வேலைநிறுத்ததில் ஈடுபட போவதாக அறிக்கை ஒன்றை அளித்து அறிவித்துள்ளது.

வங்கிகள் கடந்த 2018 டிசம்பர் 21 மற்றும் 26-ம் தேதிகளில் வங்கிகள் இணைப்பு, ஊதிய உயர்வு போன்ற காரணங்களை வழியுறுத்தி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் தனியாகப் பாங்க் ஆப் பரோடா வங்கியும் இணைந்து ஜனவரி 8 மற்றும் 9-ம் தேதிகளில் ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் போராட இருப்பதாக மும்பை பங்குச்சந்தைக்கு அறிக்கை முலம் தெரிவித்துள்ள நிலையில் வங்கிகள் தொடர்ந்து இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ள நிலையில் வங்கி சேவைகள் அனைத்தும் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் வாடிக்கையாளர்கள் அவசர வங்கி பரிவர்த்தனைகளைச் செய்ய உள்ளவர்கள்  7ம் தேதி திங்கட்கிழமைக்குள் செய்து கொள்வது உகந்தது ஆகும்.

மேலும் INTUC, AITUC,  AIUTUC,  CITU, UTUC,  AICCTU, TUCC, LPF மற்றும் SEWA ,HMS என மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களும் ஜனவரி 8 மற்றும் 9-ம் தேதிகளில் தேசிய அளவில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha

Leave a Comment