வீட்டில் இருந்த சிறுமியை வன்கொடுமை செய்த வங்கி ஊழியர் கைது.!

  • இவர் வீட்டில் தனியாக இருந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியை ராம்குமார் என்பவர்  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
  • ராம்குமார் மீது  போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து , அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை சார்ந்த ராம்குமார் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். ஆனால் இது தொடர்பாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் ராம்குமார் மீது காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில் ராம்குமார் மீது  போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து , அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

author avatar
murugan