அமெரிக்காவில் விரைவில் சீன ஆப்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள்.! மைக் பாம்பியோ தகவல்.!

அமெரிக்காவில் விரைவில் சீன ஆப்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள்.! மைக் பாம்பியோ தகவல்.!

பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சீன மொபைல் ஆப்களுக்கு எதிராக விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளாராம்.

அமெரிக்காவின், அந்நாட்டு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சீன மொபைல் ஆப்களுக்கு எதிராக விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளார் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ அண்மையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைக்கப்பட்ட மென்பொருள்களால், அமெரிக்கர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு ஆபத்துகள் குறித்து விரைவில் அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுக்க உள்ளார்.’ என மைக் பாம்பியோ தெரிவித்தார்.

முன்னதாக டிக் டாக் செயலியானது, தனி மனித தகவல்களை பாதிக்கும் வகையில் இருப்பதால், அந்த ஆப் அமெரிக்காவில் தடை செய்யப்படும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து, டிக் டாக் செயலியை அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனத்திடம் இருந்து அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube