கொரோனா அச்சுறுத்தல் … மார்ச் 31 வரை அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் தடை…

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும்  வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை தடை விதித்தள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த ஐபிஎல்  தொடர் வருகின்ற 29-ம் தேதி தொடக்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக  ஏப்ரல் 15-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்ட்டது.அதன் பின்னர் கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுருத்தி வருகிறது.

தற்போது இந்தியாவில் பரவிய கொரோனா 85 பேரை தாக்கி உள்ளது.மேலும் 2 பேர் இறந்துள்ளனர்.மத்திய ,மாநில அரசு பொதுமக்களை பொது இடங்களில் அதிகமாக கூட வேண்டாம் என அறிவுத்தலை வழங்கி வருகிறது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

author avatar
murugan