பாலகிருஷ்ணனுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி வரை சிறை…!!

பாலகிருஷ்ணனுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி வரை சிறை…!!

சென்னை_யில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் கை , கால் கண்டெடுக்கப்பட்டது.இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் இது யாருடை உடல் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் அனைத்து காவல்நிலையத்திற்கு உடல் பாகத்தின் போட்டோ அனுப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் கிடைத்த உடலின் பாகங்கள் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுடையது என்று தெரிவித்ததையடுத்து போலீசார் அவரின் கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் அவரிடம் தொடர் விசாரணையில் அவர் கொலை போலீசார் ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில் சந்தியாவின் உடல் பாகங்கள்  ஈக்காட்டுத்தாங்கல் கூவத்தில் இருந்து உடலின் மற்றொரு பாகம் கண்டெடுக்கப்பட்டது. தலை மற்றும் வயிற்றுப்பகுதி இதுவரை கிடைக்கவில்லை. பாலகிருஷ்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று பாலகிருஷ்ணன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.அப்போது நீதிமன்றம் சார்பில் விசாரணை தொடங்கி நடைபெற்றது.பின்னர் பாலகிருஷ்ணனை பிப்ரவரி 19ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *