உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…!

கஜகஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று ஆண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீரர் கால்இறுதியில் கொரியா வீரர் ஜோங் சோல் சன் வீழ்த்தி அரைஇறுதிக்கு சென்றார்.

அரைஇறுதியில் பஜ்ரங் பூனியா, கஜகஸ்தான் வீரர் டாலெட் நியாஸ்பெகோ உடன் மோதினார். 9-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தார். பின்னர் கடைசி நேரத்தில் பஜ்ரங் பூனியா  2 முறை டாலெட் நியாஸ்பெகோவை கீழே வீழ்த்தி 9-9 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இந்நிலையில்  பஜ்ரங் பூனியாவை களத்துக்கு வெளியே தள்ளியதற்கு டாலெட் நியாஸ்பெகோவ் 4 புள்ளிகள் பெற்றார்.இதன் அடிப்படையில் டாலெட் நியாஸ்பெகோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

author avatar
murugan