ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு..!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க  நேற்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மீதான விசாரணையை அக்டோபர் 15-ம் தேதி தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.மேலும் ஜாமீன் மீது சிபிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

author avatar
murugan